சர்வதேச ரீதியில் கொரோனா தாக்கம்; இரு மாதங்களில் இரட்டிப்பாக அதிகரித்துள்ள தொற்றாளர்கள் | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேச ரீதியில் கொரோனா தாக்கம்; இரு மாதங்களில் இரட்டிப்பாக அதிகரித்துள்ள தொற்றாளர்கள்

சர்வதேச ரீதியில் கடந்த இரண்டு மாதங்களில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பரவல் உச்ச கட்டத்தை நெருங்குவதை இது வெளிப்படுத்துவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அச்சம் வெளியிட்டுள்ளது. பிரேசில், இந்தியா, போலந்து, துருக்கி உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் கொரோனா பரவல் நிலை தீவிரமடைந்துள்ளது. இதேநேரம், அனைத்துப் பிராந்தியங்களிலும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comments