காதலி; நீ என் காதலி!! ஆதலால் காதலி | தினகரன் வாரமஞ்சரி

காதலி; நீ என் காதலி!! ஆதலால் காதலி

பள்ளிக்கூடம் சென்று படித்து
பல்கலைக்கழகம் சென்று
பட்டம்  பெறவேண்டிய நான்
இன்று காதலித்து  கண்ணீர்
விடுகின்றேன் காரணம்
நீ என்னை காதலிக்காததால்!!!

நீ எனைக்காதலிக்கவில்லை
எனினும் நான் உன்னை
கனவிலும்... கற்பனையிலும்...
நினைவிலும்... நிஜத்திலும்...
நித்தமும்... நிமிடங்களாய்...
நினைத்து... நினைத்து... நித்தமும்
நான் உருகிப் போகிறேன்!!!

உணவின்றி... உறக்கமின்றி...
உன் நினைவினில் உன்னதமான
சுகத்தை அடைகிறேன்
ரோஜாசெடியில் ஒவ்வொரு பூ
பூப்பது போல உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறது!!!

உன் நினைவினில் உருகிப் போகும்
எனை நீ என்று உன்னில் என்னை ஏற்பாய்????

காத்திருப்பேன் அன்பே அந்நாள் வரை!!!
நிச்சயம் அந்நாள் வரும் ஏனெனில்
என் அன்பு புரியும்நாள்; நாம்சேரும்
நாள் வரும் அன்பே வரும் அந்நாள்
நீ என் காதலன்; நான் உன் காதலி 
என நீ கூறும்வேளை என்னை
நானே மறப்பேனா இல்லை
உன்னில் மூழ்கிப் போவேனா உன்
செவ்விதழால் நீ என் காதலி என்று
சொன்னால் அன்றே அப்போதே
கூட இறந்தாலும் என்
உயிர் சாந்தி அடையும்

மணிவேல் பிரபாலேந்திரன்
கொட்டகலை.

Comments