கொழும்பு, காலி, இரத்தினபுரி, அம்பாறை; மறுஅறிவித்தல் வரை மேலும் 07 GS பிரிவுகள் முடக்கம் | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு, காலி, இரத்தினபுரி, அம்பாறை; மறுஅறிவித்தல் வரை மேலும் 07 GS பிரிவுகள் முடக்கம்

கொழும்பு, காலி, இரத்தினபுரி, அம்பாறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலுள்ள ஏழு கிராம சேவகர் பிரிவுகள் நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர செல்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்று தொடக்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஹோட்டல்களில் நடைபெறும் விருந்துபசாரங்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் இரவுநேர கேளிக்கைகள், களியாட்டங்கள் போன்றவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இரவு 10 மணியின் பின்னர் இந்த நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட நாம்பமுணுவ, கொரகாபிடிய ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், காலி மாவட்டத்தில் அம்பலாங்கொடை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட கொடஹேன, தல்கஸ்கொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டிய பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட தெஹியத்தகண்டிய, கதிராபுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட ஹப்புகொடை கிராம சேகவர் பிரிவுமே இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்றுக் காலைமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments