இலங்கையில் சைனோபார்ம் தொழிற்சாலை | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் சைனோபார்ம் தொழிற்சாலை

சீனாவின் சைனோபார்ம் நிறுவனமானது இலங்கையிலும் அதன் தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையொன்றை நிறுவுவதற்கு அவதானம் செலுத்தியுள்ளது.

சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்தின் தலைவர் லியு ஜின்க்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹேன ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கை மக்களுக்காக சைனோபார்ம் நிறுவனம் தொடர்ந்து தடுப்பூசி வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி வழங்கிய கடிதத்தையும் தூதுவர் இதன்போது சைனோபார்ம் நிறுவன தலைவருக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட சைனோபார்ம் நிறுவன தலைவர், சைனோபார்ம் நிறுவனம் இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்குமென தெரிவித்தார். மேலும் சைனோபார்ம் தடுப்பூசியானது 100 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், 50இ ற்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் சைனோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.சைனோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு எவ்விதமான பாதகமான விளைவுகளும் இல்லையெனவும் அதன் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Comments