ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரிடம் தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடும் வரை தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
தமது சம்பள பிரச்சினை தொடர்பான கோரிக்கையை முன்வைத்து, ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளை பகிஷ்கரித்து 61 ஆவது நாளாக இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கமே முழு பொறுப்பினை ஏற்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.