சிறையிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் செலவழிக்க 4,500 ரூபா; | தினகரன் வாரமஞ்சரி

சிறையிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் செலவழிக்க 4,500 ரூபா;

சிறையில் உள்ள தனது மகன் ஆர்யன் கானுக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் ஷாருக்கான் மணி ஆர்டர் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. சொகுசு கப்பலில் போதைப் பொருள்பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த 3-ம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஆர்யன் தற்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஷாருக்கான் வீட்டில் இருந்து ஆர்யனுக்கு உணவு சமைத்துக்கொண்டு செல்லப்பட்டது. எனினும் சிறை அதிகாரிகள் அந்த உணவை கொடுக்க அனுமதி மறுத்து விட்டனர்.

இதனையடுத்து சிறையில் உள்ள கேண்டீனில் ஆர்யன் கான் செலவழிப்பதற்காக ஷாருக்கான் ரூ 4,500 ரூபா அவருக்கு மணியாடர் செய்ததுடன், சிறை விதிகளின்படி வீடியோ காலில் மகனுடன் ஷாருக் உரையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிறை விதிகளின்படி ஒருவருக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 4,500 மணியாடர் அனுப்ப விதிமுறைகள் உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக விசாரணைக் கைதிகளை உறவினர்கள் பார்க்க அனுமதி இல்லை.

எனினும் கைதிகள் வாரத்திற்கு இரண்டு முறை குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்படுகின்ற நிலையில், ஷாருக்கான் அவரது மனைவி கவுரிகான் இருவரும் ஆர்யன் கானுடன் வீடியோ காலில் பேசியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Comments