மசகு எண்ணெய் ஏற்றிய 02கப்பல்கள் அடுத்த மாதம் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாவது கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது. இரண்டாவது கப்பல் டிசம்பர் மாத இறுதியில் நாட்டை வந்தடையுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மசகு எண்ணெய் ஏற்றிய மற்றுமொரு கப்பலும் நாட்டை வந்தடையுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.