சொய்சாபுர தொடர்மாடி வீடொன்றில் தீ | தினகரன் வாரமஞ்சரி

சொய்சாபுர தொடர்மாடி வீடொன்றில் தீ

சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயர்தர மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.  நேற்று முன்தினம் பிற்பகல் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவில் சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் 19வயதுடையவராவார்.தீ விபத்திற்கான காரணம் இது வரை கண்டறியப் படாத நிலையில், கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்த மாணவன் கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்பதோடு, பெப்ரவரி மாதம் நடைபெறவிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் தோற்றவிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments