ரயில் நிலைய அதிபர்களின் பணிப் புறக்கணிப்பு கைவிடப்பட்டதையடுத்து, நேற்று (15) முதல் ரயில் சேவைகள் வழமைபோல நடைபெறுவதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதை அடுத்து, ரயில் நிலைய அதிபர்கள் கடமைக்கு சமுகமளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபதலைவரை பதவியிலிருந்து நீக்க ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சங்கம் நேற்று முன்தினம் திடீர் பணிப்புறக்கணிக்கை மேற்கொண்டது.
பதவி நீக்கப்பட்ட ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் உபதலைவரை மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து, இச்சங்கம் போராட்டத்தைக் கைவிட்டது.