அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளுக்கும் ஆவணம் | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளுக்கும் ஆவணம்

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்த ஆவணம் அமெரிக்கா, மேற்கு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் தூதரகங்களிடமும் கையளிக்கப்படவுள்ளது என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பேச்சாளர் கு. சுரேந்திரன் தெரிவித்தார்.

13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், நாட்டின் இனப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு கூட்டு சமஷ்டி முறைமையே, இதன் மூலமே தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை நிலைநிறுத்தப்படும் என்ற விடயங்களை வலியுத்தி இந்தியப் பிரதமருக்கு எழுதப்பட்ட அந்தப் பொது ஆவணம் கடந்த 18ஆம் திகதி இந்தியத் தூதரகத்திடம் கையளிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் இந்தப் பொது ஆவணமே அமெரிக்கா, மேற்கு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளின் தலைவர்களே நேரில் சென்று கையளிக்கவுள்ளனர். இந்த நடவடிக்கை அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.

Comments