யாழ். சர்வதேச வர்த்தக சந்தைக்கு பெரு வரவேற்பு | தினகரன் வாரமஞ்சரி

யாழ். சர்வதேச வர்த்தக சந்தைக்கு பெரு வரவேற்பு

2022ஆம் ஆண்டுக்கான 12ஆவது யாழ்.சர்வதேச வர்த்தகச் சந்தை பெரு வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வர்த்தக மன்றம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ்.வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், யாழ்.இந்திய உதவித்துணைத் தூதரகம் ஆகியவற்றின் எற்பாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான 12வது சர்வதேச வர்த்தகச் சந்தையின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் யாழ். மாநகர திறந்தவெளி மைதானத்தில் நேற்றும் இடம்பெற்றது.

47விற்பனைக்காட்சிக்கான நுகர்வோர் பொருட்களும், இதர உள்ளிட்ட பொருட்களும் உழவு இயந்திர வாகனம், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பாகங்களின் வாகனங்களும் தொழில் முயற்சியினை தேடும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கூடாரங்களும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துகொண்டு உத்தியபூர்வமாக சர்வதேச வர்த்தகச் சந்தையினை அங்குராப்பண நாடாவினை வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

Comments