லண்டன் - இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனங்கள் நடத்தும் இரா. உதயணன் இலக்கிய விருது விழா நிகழ்வு இன்று | தினகரன் வாரமஞ்சரி

லண்டன் - இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனங்கள் நடத்தும் இரா. உதயணன் இலக்கிய விருது விழா நிகழ்வு இன்று

லண்டன் - இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனங்கள் நடத்தும் இரா. உதயணன் இலக்கிய விருது விழா நிகழ்வு இன்று மாலை 04மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுகிறது.  இந்த விழாவில் தமிழ் இலக்கியத்துக்கு பங்களிப்புச் செய்த பல இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். 

இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில், பேராசிரியர் சபா ஜெயராசா தலைமையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் சிறப்பு அம்சமாக சிரேஷ்ட ஊடகவியலாளரும், எழுத்தாளருமான கே. பொன்னுத்துரையின் எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது 'எண்ணப் பகிர்வுகள்' அடங்கிய தொகுப்பு நூலும் வெளியிடப்படவுள்ளது. விழாவில் தேசிய தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக லண்டனில் தங்கியுள்ள லண்டன்- இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனங்களின் ஸ்தாபகரும், தலைவருமான இரா உதயணன் கலந்து கொள்ள முடியாத காரணத்தினால் அவர் காணொளி மூலமாக அங்கிருந்தவாறே விழாவில் உரையாற்றுவார்.  

Comments