
சர்வதேச நாணய நிதியத்தின் குழு, இலங்கையுடன் நாளை 09 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை இணையவழியூடாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இலங்கை தொடர்பான தமது புதுப்பிக்கப்பட்ட அறிவித்தலை வெளியிட்டு சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதானி மசாயிரோ நொஸாகி அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் தமது கொள்கை எல்லைக்குள் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.