SLFP யிலிருந்து மேலும் ஐவர் அரசுடன் இணைவு? | தினகரன் வாரமஞ்சரி

SLFP யிலிருந்து மேலும் ஐவர் அரசுடன் இணைவு?

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்தில் இணைந்துக் கொண்டுள்ளதையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மேலும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்தில் இணைந்து, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். மஹிந்த அமரவீரவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி கிடைக்குமென தெரியவருகிறது. 

ஏனைய நான்கு பேரில் மூன்று பேருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்த போதிலும் பதவிகளை பெற்றுக்கொள்வதில்லையென முடிவு செய்திருந்தது. இவ்வாறான நிலையிலேயே அந்த கட்சியை சேர்ந்த மேலும் ஐந்து பேர் அரசாங்கத்தில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments