
நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகளுடன் டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 16தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளை சுங்கப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.