இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்; IMF அதிகாரிகள் குழு 24இல் இலங்கை வருகிறது | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்; IMF அதிகாரிகள் குழு 24இல் இலங்கை வருகிறது

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்தங்கள், கொள்கைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக  அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. 

இந்தக் குழு எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரையான காலப்பகுதியில் விஜயம் செய்யவுள்ளதாக இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீற்றர் புருயர் மற்றும் இலங்கை குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாகி ஆகியோர் தலைமையில் இந்தக் குழு வழிநடத்தப்படவுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டுக்கான, பணிக்குழாம் மட்ட ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

இலங்கையின் பொதுக் கடன் நிலைத்தன்மையற்றது என மதிப்பிடப்படுவதால், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின், விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஒப்புதலுக்கு, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்காக, இலங்கையின் கடன் வழங்குநர்களின் போதுமான உத்தரவாதங்கள் அவசியமாகும். இந்த விஜயத்தின்போது, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், ஏனைய பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Comments