இ.தே.தோ.தொ சங்கத் தலைவராக சாகல | தினகரன் வாரமஞ்சரி

இ.தே.தோ.தொ சங்கத் தலைவராக சாகல

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்கவை நியமிக்க கட்சியின் முகாமைத்துவச் சபை தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் முகாமைத்துவச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பதவி வகிக்கும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளதுடன் தான் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனால், புதிய தலைவரை நியமிக்குமாறும் அறிவித்துள்ளார். இதற்கமைய ஜனாதிபதியின் பணிக்குழுவின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்நாயக்கவை சங்கத்தின் தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் ஹரின் பெர்னாண்டோ பதவியிலிருந்து விலகிய பின்னர்,சாகல ரத்நாயக்க, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஐக்கிய தேசியக்க ட்சியின் பழையதொழிற்சங்கங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Comments