எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் நாளாகட்டும் | தினகரன் வாரமஞ்சரி

எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் நாளாகட்டும்

பிரதமர் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

தைத் திருநாள், நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய புத்தெழுச்சிக்கான செயற்றிறனான எண்ணக்கருவுக்கு உத்வேகமாக அமைவதுடன், எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் புத்தாண்டின் விடியலாக அமையவேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஸ் தனது தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அறுவடைத் திருநாள் எனப்படும் தைப் பொங்கல் , இயற்கையுடன் இணைந்த பாரம்பரிய வாழ்க்கை முறையை நம்பியுள்ள எமது சகோதர தமிழ் விவசாய சமுகத்தினர் சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் சூரியனுக்கு நன்றி செலுத்துவதைக் குறிக்கிறது.

தேசிய கலாசாரத்தின் ஒரு அங்கமாக மாறியுள்ள தைப் பொங்கல் பண்டிகை, அமைதி, ஒற்றுமை, கருணை ஆகிய விழுமியங்களை உள்ளடக்கி, விவசாயப் பொருளாதார மறுமலர்ச்சியை மையமாகக் கொண்டு தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய புத்தெழுச்சிக்கான எண்ணக்கருவுக்கு உத்வேகமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

இந்து கலாசாரத்தின் சிறப்பை பிரதிபலிக்கும் தைத் திருநாள், இயற்கையோடு இயைந்து வாழவும், இந்து கலாசார பாரம்பரியத்துக்கு ஏற்ப எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் புத்தாண்டின் விடியலாக அமையவேண்டும்.

தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எனது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments