ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (30) நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ், இந்நாட்டில் தனது பணியை ஏற்றுக்கொண்டதன் நிமித்தமே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்குமிடையில் பல்வேறு கருத்துகள் இதன்போது பரிமாறப்பட்டன. நாட்டில் நிலவிவரும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரியப்படுத்தினார்.
தற்போதைய அரசாங்கம், மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல்களை ஒத்திவைத்து அடிப்படை உரிமைகளை மீறி வருவது தொடர்பாகவும் அவர் மேலும் தெரியப்படுத்தினார்.