Home » தம்பலகாமத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம்

தம்பலகாமத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம்

by admin
September 3, 2023 11:52 am 0 comment

வடகிழக்கு யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர்களின் உறவுகளுக்கான விசாரணை தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (03) இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையின் கீழ் நடைபெற்ற இவ் வாக்குமூல பதிவில் தம்பலகாமம், கிண்ணியா, திருகோணமலை பட்டினமும் சூழலும், மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்களில் சுமார் 22 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணைக்குழு முன்னிலையில் தங்களது வாக்குமூலங்களை அளித்ததுடன், ஆணைக்குழுவினர் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர். இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணையாளர் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தம்பலகாமம் குறூப் நிருபர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division