வடகிழக்கு யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர்களின் உறவுகளுக்கான விசாரணை தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (03) இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையின் கீழ் நடைபெற்ற இவ் வாக்குமூல பதிவில் தம்பலகாமம், கிண்ணியா, திருகோணமலை பட்டினமும் சூழலும், மொறவெவ ஆகிய பிரதேச செயலகப் பகுதிகளை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்களில் சுமார் 22 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணைக்குழு முன்னிலையில் தங்களது வாக்குமூலங்களை அளித்ததுடன், ஆணைக்குழுவினர் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர். இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக ஆணையாளர் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தம்பலகாமம் குறூப் நிருபர்