Home » தேயிலை ஏற்றுமதியில் அதிக வருமானம்; சீனாவுக்கு அடுத்ததாக தரப்படுத்தலில் இலங்கை

தேயிலை ஏற்றுமதியில் அதிக வருமானம்; சீனாவுக்கு அடுத்ததாக தரப்படுத்தலில் இலங்கை

- தலைவர் கணேஷ் தெய்வநாயகம் கருத்து

by admin
September 10, 2023 3:58 pm 0 comment

சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியை பெறும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக, தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கணேஷ் தெய்வநாயகம் தெரிவித்தார்.

தேயிலை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தெரிவாகியுள்ள கணேஷ் தெய்வநாயகம் இது தொடர்பாக மேலும் தெரிவித்த போது, தேயிலைக் கலவை தொழில்நுட்பத்தில் தனித்துவத்தை இலங்கை தொடர்ந்து பேணுவதால், சர்வதேச சந்தையில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். ஒரு கிலோகிராம் இந்திய தேயிலையின் ஏற்றுமதிக் கட்டணம் 3.58 அமெரிக்க டொலர்களாகவும் கென்யாவின் ஏற்றுமதிக் கட்டணம் 2.60 அமெரிக்க டொலர்களாகவும் இருக்கையில், இலங்கை தேயிலையின் சராசரிக் கட்டணம் 5.10 டொலர்களாக திகழ்வது வரவேற்கத்தக்க விடயமெனவும், அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ச்சியான முயற்சி, சர்வதேச தடைகளிலிருந்து வெளியேறுதல் மற்றும் நவீன தன்மையை அறிமுகப்படுத்தல் போன்ற காரணிகளால், இந்தச் சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division