Home » 45,000 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு
2022 G.C.E (A/L) பரீட்சை பெறுபேறுகளின் படி

45,000 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு

1,66,936 பேர் பல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி

by Damith Pushpika
September 17, 2023 5:18 am 0 comment

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய இந்த வருடம் 45,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படுவதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு 2,63,993 மாணவர்கள் தோற்றியதாகவும் அவர்களில் 1,66,936 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இது 63.3 சதவீதமாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division