Home » நில்வளா கங்கை வெள்ள மட்டத்தை அடைய வாய்ப்பு

நில்வளா கங்கை வெள்ள மட்டத்தை அடைய வாய்ப்பு

அவதானமாக இருக்க மக்களுக்கு அறிவுறுத்தல்

by Damith Pushpika
October 8, 2023 6:52 am 0 comment

நில்வளா கங்கையை அண்மித்த பகுதியில் எதிர்வரும் 24 மணிநேரத்தில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடுமென, நீர்ப்பாசனத் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இவ்வாறு அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகுமாயின், நில்வளா கங்கை வெள்ள மட்டத்தை அடையுமெனவும், அத்திணைக்களம் தெரிவித்தது.

இதனால் மாத்தறை, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, திஹகொட, அத்துரலிய மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும், நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இப்பகுதிகளில் பாரிய வௌ்ளம் ஏற்படுவதற்கான அபாயம் நிலவவுதாகவும், அத்திணைக்களம் எச்சரித்துள்ளது. வௌ்ளத்தினால் ஏற்படும் அபாயங்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இது தொடர்பாக சாரதிகளை அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும், நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division