Home » வடக்கு பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனம்

வடக்கு பட்டதாரிகளுக்கு விரைவில் அரச நியமனம்

ஆசிரியர் பற்றாக்குறைக்காக 1,000 பட்டதாரிகள்

by Damith Pushpika
October 15, 2023 7:20 am 0 comment

வடமாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 1,000 பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்கவுள்ளதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மன்னாரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார். வடமாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க 1,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதுடன், விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும், அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுவதுடன், புதிய தொண்டர் ஆசிரியர்களை சேவையில் இணைக்கவுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் முடிவானது கடல் துறை சார்ந்த விடயங்களின் அரசாங்கத்தின் இறுதியான முடிவாக இருக்குமெனவும் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division