Home » டிசம். 22 முதல் பெப். 02 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

டிசம். 22 முதல் பெப். 02 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

கல்வி அமைச்சர் சுசில் நேற்று அறிவிப்பு

by Damith Pushpika
November 5, 2023 6:10 am 0 comment

2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலைக் கற்கைகள், எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதலாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், கல்வி அமைச்சு தெரிவித்தது.

இந்த ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்துக்கான பாடசாலை நடவடிக்கைகள், 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டதுடன், இரண்டாம் தவணை கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 27) நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division