Home » 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணினிகள் அன்பளிப்பு
சீன அரசால் பொலிஸ் திணைக்களத்துக்கு

26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணினிகள் அன்பளிப்பு

by Damith Pushpika
November 12, 2023 7:20 am 0 comment

சீன மக்கள் குடியரசால் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்காக RANOMOTO வகையைச் சேர்ந்த 26 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணினிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் ஒருங்கிணைப்புடன் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்கிரமரட்ன, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹொங்விடம் (Qi Zhen Hong) விடுத்த வேண்டுகோளுக்கமைய, பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை இலகுவாக்க இவை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆவணங்கள், இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஷென் ஹொங்வால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் சீனத் தூதரக அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்கிரமரத்ன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் (நிர்வாகம்) நிலந்த ஜயவர்தன உட்பட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division