விசேட தேவையுள்ளோருக்கு புதிய வாக்குச் சீட்டு அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

விசேட தேவையுள்ளோருக்கு புதிய வாக்குச் சீட்டு அறிமுகம்

விசேட தேவையுடையோர் வீட்டிலிருந்தே வாக்களிக்கக்கூடிய வேலைத்திட்டம் எதிர்வரும் காலங்களில் தயாரிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விசேட தேவை உள்ளவர்களுக்கும் புதிய வாக்குச் சீட்டு அறிமுகப்படுத்தப்படுமென மேலும் வலியுறுத்தப்பட்டது.

Comments