துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு; இதுவரை 28 பேர் பலி | தினகரன் வாரமஞ்சரி

துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு; இதுவரை 28 பேர் பலி

வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 28பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் நிலத்தடியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிப்பின் போது சுமார் 110பேர் சுரங்கத்த்துக்குள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

அவர்களில் பாதி பேர் 300மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் இருந்துள்ளனர். 

வெடிப்பின் பின்னர்,11பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக துருக்கியின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அவசரகாலக் குழுக்கள் இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. 

காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் சுரங்கத்தில் தங்கள் அன்புக்குரியவர்களின் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்த்து அப்பகுதியில் குழுமியிருந்தனர். 

இந்த வெடிப்பு சுமார் 300மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. 

இந்தநிலையில் சுமார் 300முதல் 350மீற்றர் வரையிலான 'ஆபத்தான' பகுதியில் சுமார் 49பேர் பணிபுரிந்து வருவதாக உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்தார். 

குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 

நிலக்கரிச் சுரங்கங்களில் வெடிக்கும் கலவையை உருவாக்கும் மீத்தேன், ஃபயர்டேம்பினால் வெடித்ததற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக துருக்கியின் எரிசக்தி அமைச்சர் கூறினார். 

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் நேற்று சனிக்கிழமை அந்த இடத்தை பார்வையிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டில் துருக்கியின் மேற்கு நகரமான சோமாவில் ஏற்பட்ட வெடிப்பின்போது 301 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments