கலைஞர் கருணாநிதிக்கு கொழும்பில் நினைவஞ்சலி | தினகரன் வாரமஞ்சரி

கலைஞர் கருணாநிதிக்கு கொழும்பில் நினைவஞ்சலி

ஆகஸ்ட் 07 மாலை 4.30 க்கு பிரைட்டன் ஹோட்டலில்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி கூட்டத்தை கொழும்பு மாநகரில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 07 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, ஆமர் வீதி, பிரைட்டன் ஹோட்டல் மண்டபத்தில் இந்த அஞ்சலி கூட்டம் நடைபெறவுள்ளது.

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெரியசாமி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹககீம் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார்,ஆசியுரையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ கலாநிதி பாபு சர்மா ராமச்சந்திர குருக்கள் நிகழ்த்த வரவேற்புரையை தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் நிகழ்த்துவார். தொடக்கவுரை கலைஞர் கலை ச்செல்வன் நிகழ்த்த நன்றி உரையினை இலங்கை இந்திய பத்திரிகை தொடர்பாளர் மணவை அசோகன் நிகழ்த்துவார்.

இந்த விழாவில் சிறப்பதிதிகளாக அழைக்கப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மறைந்த முதுபெரும் தலைவர் தமிழறிஞர், கலைஞர் கருணாநிதிக்கு மலர் அஞ்சலி செலுத்துவதுடன் அஞ்சலி தீபத்தை ஏற்றி வைப்பார்கள் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த அஞ்சலி கூட்டத்தினை சுகாதார வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் முழுமையாக பின்பற்றி நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Comments