தர்ம சங்கடத்திற்கு ஆளான | தினகரன் வாரமஞ்சரி

தர்ம சங்கடத்திற்கு ஆளான

நடிகை ஐஸ்வர்யாராய் 'ஏக் தில் முஷ்கில்' படத்தில் நடித்தபோது கவர்ச்சியாக நடித்ததாக சில சர்ச்சைகளை சந்தித்தார். குழந்தை பிறந்த பிறகு இவர் ரீ எண்ட்ரி கொடுத்த படம் இதுவே.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார். அப்போது இந்திய நாட்டின் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இதில் அவரது மகள் ஆரத்யாவும் கலந்துகொண்டார்.

கொடி ஏற்றும்போது அவர் அணிந்திருந்த லோ கட் நெக் வைத்திருந்த ஆடை விலகியதால் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. மேலும் மேடையில் பேசும் போதும், புகைப்படம் எடுக்கும் போது கை வைத்தும், துப்பட்டாவால் மறைத்தும் போஸ் கொடுத்தார்.

மேலும் இந்திய கொடியை, ஆஸ்திரேலியாவில் இந்திய திரைப்பட விழாவில் ஏற்றிய முதல் இந்திய நடிகை என்ற சிறப்பை பெற்றார். 

Comments