திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியோருக்கு OPPO கெளரவம் | தினகரன் வாரமஞ்சரி

திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியோருக்கு OPPO கெளரவம்

ஊழியர்களுக்கு சிறந்த பயிற்சிகள் மற்றும் அபிவிருத்திக்கான வாய்ப்பை வழங்கும் வகையில், OPPO, இரு நாள் விற்பனை ஊக்குவிப்பு மற்றும் பயிற்சிமுகாம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வுக்கு ‘Simple and focused: run to achieve’என பெயரிடப்பட்டிருந்தது. குக்குளேகங்க லயா லெய்ஷர் ரிசோர்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் விற்பனை செயலணியினர் பங்கேற்றனர். சிறந்த பெறுபேறுகளை பதிவுசெய்திருந்த ஊழியர்களை கெளரவிக்கும் வகையில் இது அமைந்திருந்ததுடன், ஊழியர்களுக்கு உற்சாகமூட்டும் முகாம் அனுபவத்தையும் வழங்கியிருந்தது. மேலும், சகல ஊழியர்களுக்கும் நிறுவனத்தின் கலாசாரத்தை பயிற்றுவிப்பது மற்றும் வர்த்தக நாமம் மற்றும் 2018ஆம் ஆண்டுக்கான அதன் நிறுவனசார் இலக்குகள் போன்றவற்றை தெளிவுபடுத்தும் வகையிலும் அமைந்திருந்தது.

நிறுவனத்தின் வெற்றிகரமான இயக்கத்தை எமது ஊழியர்கள் உறுதி செய்கின்றனர். அவர்கள் சக்தி, அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பு ஆகியன வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவதுடன், பெருமளவான வாடிக்கையாளர்களை OPPO உடன் இணைக்கச் செய்யபங்களிப்பு வழங்குவதாகவும் அமைந்துள்ளது. இதனை கவனத்தில் கொண்டு, எமது ஊழியர்களின் ஆளுமைகளை மேம்படுத்துவதில் நாம் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொள்வதுடன், அவர்களின் பெறுமதியான பங்களிப்பையும் கெளரவித்து வருகிறோம்.

ஊக்குவிப்பு மற்றும் பயிற்சிமுகாம் என்பது நிறுவனசார் அர்ப்பணிப்பின் ஒருஅங்கமாக அமைந்துள்ளதுஎன OPPO லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லி தெரிவித்தார்.

OPPO லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொப் லி யின் ஆரம்ப உரையை தொடர்ந்துமுகாம் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன. தனது உரையில் இவர் சிறந்த விற்பனை நுட்பங்கள், வர்த்தகநாம விருத்தி மற்றும் எதிர்காலத்திட்டங்கள் போன்றன தொடர்பில் உரையாற்றியிருந்தார். விருதுகள் வழங்கும் நிகழ்வு முதலாம் நாளில் நடைபெற்றதுடன், சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தியிருந்தவர்களுக்கு கெளரவிப்புகள் வழங்கப்பட்டன.

இதில் ஊக்குவிப்பாளர்கள்,விற்பனை அதிகாரிகள், உதவி விற்பனை முகாமையாளர்கள் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் போன்றோர் அடங்கியிருந்தனர். உறுதிபூணும் நிகழ்வில் சகல ஊழியர்களும் இணைந்து சிறப்பாக செயலாற்றுவதாகவும், வர்த்தகநாமத்தை சிறப்பாகக்கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்குவது தொடர்பில் தமது உறுதியை வழங்கியிருந்தமை பிரதான அம்சமாக அமைந்திருந்தது.

Comments