ஷிவாங்கி பதக் (16) ஹரியாணாவின் ஹிஸர் நகரைச் சேர்ந்தவர். உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்டின் உச்சத்தை கடந்த வாரம் தொட்டு இவர் சாதனை படைத்திருக்கிறார். மே 7ம் திகதி மலையேறத் தொடங்கிய ஷிவாங்கி மூன்றே நாட்களில் எவரெஸ்ட்டின் அடிவார முகாமை அடைந்தார்.
பின்பு அங்கிருந்து, கடல் மட்டத்திலிருந்து 9 கி.மீ. உயரத்தில் இருக்கும் சிகரத்தை ஆறு நாட்களில் அடைந்துள்ளார். மலையேறத் தொடங்கும் முன் காஷ்மீரில் நான்கு மாதம் மேற்கொண்ட கடுமையான பயிற்சி இதற்கு உதவியுள்ளது. எவரெஸ்ட்டைத் தொட்டதும் தன்னையறியாமல் தேசிய கீதத்தைப் பாடியதாகக் கூறுகிறார்.