நானா படேகருக்கு எதிராக தனுஸ்ரீ தத்தா வாக்குமூலம் | தினகரன் வாரமஞ்சரி

நானா படேகருக்கு எதிராக தனுஸ்ரீ தத்தா வாக்குமூலம்

பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பொலிஸில் புகார் அளித்துள்ள தனுஸ்ரீ தத்தா, கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மும்பை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறியுள்ளார்.

2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தில் பாடல் காட்சிகள் படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம்சாட்டி இருந்தார். தனுஸ்ரீயின் இந்த குற்றச்சாட்டு பாலிவுட் உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பாலியல் புகாரை நானா படேகர் தொடர்ந்து மறுத்து வருகிறார். தனுஸ்ரீ பொய் சொல்வதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா பொலிஸில் புகார் அளித்தார். தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நானா படேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று அவர் புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

Comments