H.S. Fabric Collection | தினகரன் வாரமஞ்சரி

H.S. Fabric Collection

இலங்கையின் தரமான தளபாட, திரைச்சீலை துணிவகைகளின் விநியோகத்தர்களான H.S. Fabric Collection, தனது புதிய காட்சியறையை அண்மையில் மொரட்டுவையில் ஆரம்பித்து வைத்தது.

இந்த ஆரம்ப விழாவில் இலங்கை இராணுவத்தின் துணை அதிகாரியும் கஜபா படையணியின் கேர்ணலுமான - மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள பிரபல தளபாட உற்பத்தியாளர்கள், வடிவமைப்பாளர்கள், கட்டடக் கலைஞர்கள், மற்றும் ஹோட்டல்துறை சார்ந்தோர் உட்பட பெருந்திரளான வாடிக்கையாளர்களும்் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய H.S. Fabric Collection இன் பொது முகாமையாளர் ஜினாலி ஹெட்டியாராச்சி “இந்தப் புதிய கிளையின் மூலம், மொரட்டுவையில் உள்ள எங்களது வாடிக்கையாளர்களுக்கு எங்களது உற்பத்திகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளமை எங்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது.”

“தளபாட உற்பத்தியில் மொரட்டுவை முக்கிய நகராக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்நகரில் எங்களது வடிக்கையாளர் அடித்தளமானது, அதிகரித்து வந்திருக்கின்றது. எனவே அவர்களுக்குச் சமீபமாக வந்து அவர்களது ஒட்டுமொத்த கொள்வனவு அனுபவத்தினையும் மேலும் வசதி மற்றும் வினைத்திறன் மிக்கதாய் ஆக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது தங்களுக்கான தளபாடங்களைக் கொள்வனவு செய்ய மொரட்டுவைக்கு விஜயம் செய்யும்் எங்களது வாடிக்கையாளர்களுக்கு, கொள்வனவு அனுபவத்தினை சிரமமின்றி பெற்றுக்கொடுக்கவும் அவர்களது நேரத்தை மீதப்படுத்தவும் உதவும். அதேவேளை இப்புதிய கிளையில் தங்களது தளபாடங்களைக் கொள்வனவு செய்ய மொரட்டுவைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களது தளபாடங்கள் மற்றும் திரைச்சீலைகளுக்கான துணிவகைகளையும் கூடவே கொள்வனவு செய்வர்,” என்று அவர் கூறினார்.

சந்தையில் முன்னணி வகிக்கும்் H.S. Fabric Collection, தளபாட மற்றும் திரைச் சீலைத துணிவகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்து விநியோகிகும் பணியில் கடந்த 27 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதோடு, இலங்கையில் உறுதியாகத் தன்னை நிலைநிறுத்தியுமுள்ளது. வீட்டின் உள்ளக அலங்காரத்துக்கான சகல துணிகைகளின் தேவைகளையும் பூர்த்திசெய்யும் ஒரே இடமாகவும் பாரிய கையிருப்பை பேணுவதாகவும், விநியோகங்கள் உடனடியாக வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும்.

மேலும் கருத்துக்கூறிய திருமதி ஹெட்டியாராச்சி “எங்கள் வர்த்தகமானது சந்தைப்போக்குகளை ஆராய்வதிலும், வாடிக்கையாளர் தேவைகளை இனங்காணுவதிலுமே தங்கியிருக்கின்றது. இதன்மூலம் இன்றைய நவீன போக்குக்கேற்ற, சிறந்த தரத்திலான துணிவகைகளை நீடித்த பாவனை கொண்டவையாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிகின்றது என்றார்.

Comments