திருப்பாவை பாடி திருமாலை மணந்த ஆண்டாள் | தினகரன் வாரமஞ்சரி

திருப்பாவை பாடி திருமாலை மணந்த ஆண்டாள்

திருப்பாவையை 12ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது மொத்தம் 30பாடல்களை கொண்ட இந்த திருப்பாவை நூலின் சிறப்பும், அதை அருளிய ஆண்டாளின் சிறப்புகளையும் பார்ப்போம். 

திருமாலின் பெருமைகளைப் பரப்பியவர்களும், திருமால் தான் எல்லாம் என வாழ்ந்தவர்கள் ஆழ்வார்கள். அப்படிப்பட்ட ஆழ்வார்கள் பல்வேறு திருமால் மீது பாடி பல்வேறு பாடல்கள் மிகவும் வைணவ நூல்களாக விளங்குகின்றன. 

அப்படி திருப்பாவை நூலை அருளியவர் தான் ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள். இவரை மற்றொரு ஆள்வார்களில் ஒருவரான விஷ்ணு சித்தர் எனும் பெரியாழ்வார் மதுரைக்கு அருகில், தற்போது விருதுநகரில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் ஊரில் துளசி செடியின் கீழ் கண்டெடுத்து, அவரை பெருமாளின் பக்தையாக வளர்த்து வந்தார். 

கண்ணன் மீது காதல்  

சிறு வயது முதல் பெருமாள் மீது அதிக பக்தி கொண்ட ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூர் அரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு தினமும் மலர்களை கொய்து மாலையாக கட்டி அதை சுவாமிக்கு கொடுப்பதை கடமையாக செய்து வந்தார். 

தனக்கென குடும்பம் இல்லாததால், ஆண்டாளை இறைவன் கொடுத்த கொடையாக நினைத்து வளர்த்து வந்தான். 

சிறுவயது முதல் வைணவ சமயம் சார்ந்த தனக்கு தெரிந்த அனைத்தையும், தான் மகளாக வளர்த்த கோதைக்கு விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார்) சொல்லிக் கொடுத்து வளர்த்தார். இதனால் இளம் வயதிலிருந்து கண்ணன் மீது அளவு கடந்த பக்தி பெருகியது. போகப் போக அது கண்ணன் மீது காதலாக மாறியது. அவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டார். 

சூடிக்கொடுத்த சுடர்கொடி 

கோயிலில் திருமாலுக்கு அளிக்க பெரியாழ்வார் தினமும் தொடுத்த மாலையை கோதை கோயிலுக்கு கொண்டு சென்று கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். 

அப்படி பெருமாளுக்கு கொண்டு செல்வதற்கு முன் அந்த மாலையை தான் அணிந்து கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்த பின்னர் அதனை பெருமாளுக்கு கொண்டு செல்வதுமாக கோதை இருந்தார். 

அப்படி ஆண்டாள் சூடிய மாலையையே இறைவனுக்கு சூட்டப்பட்டன. ஒருநாள் ஆண்டாள் மாலையை சூடிப்பார்த்துக் கொண்டிருந்த போது அதனை விஷ்ணு சித்தர் பார்த்துவிட, ஆண்டாளை மிகவும் கடிந்து கொண்டார். அதன் பின்னர் மீண்டும் புது மாலையை தொடுத்து இறைவனுக்கு கொடுத்தார். 

பெரியாழ்வாரின் கனவில் 

அன்றிரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய இறைவன், தனக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையே உகப்பானவை, அதனால் தினமும் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை எனக்கு சூட வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

இதனால் “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றும் “இறைவனையே ஆண்டவள்” என்ற பெயரில் போற்றப்படுகிறார். 

​இறைவனுடன் கலந்த ஆண்டாள் 

கோதை மண வயதை அடைந்த நிலையில், அவருக்கு என திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார் பெரியாழ்வார். அதனை மறுத்த கோதை கண்ணனைத் தான் திருமணம் செய்வேன் என பிடிவாதமாக இருந்தார். 

இறைவனை எப்படி திருமணம் செய்து வைப்பேன் என கவலையில் ஆழ்ந்திருந்த விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றிய திருமால், கோதையை மணப்பெண் அலங்காரமிட்டு திருவரங்கம் அழைத்து வாருங்கள் என பணித்தார்.  அதன் படி மண அலங்காரம் செய்து கோதையை அழைத்து செல்ல, கோயிலின் கருவறைக்குள் சென்ற அவர் இறைவனோடு கலந்து விட்டாள் என்கிறது ஆண்டாள் வரலாறு. 

​பாவை நோன்பு: 

தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னி பெண்கள் பாவை நோன்பு ஏற்பது வழக்கம். மார்கழி மாதம் அதிகாலை எழுந்து நீராடி, வீட்டின் முன் கோலம் போட்டு, இறைவனை துதித்து வழிபடுவது வழக்கம். இதனை பின்னணியாக கொண்டு இயற்றப்பெற்றது தான் திருப்பாவை நூல் ஆகும். தற்போது ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களை தான் பாவை நோன்பு காலத்தில் பாடப்படுகிறது. 

திருப்பாவை எனும் வழிகாட்டி: 

திருப்பாவை என்பது மார்கழி மாதத்தில் எப்படி இருக்க வேண்டும். இறைவனை எப்படி வணங்கி அருளைப் பெற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது. 

திருப்பாவை: 

திருப்பாவையை 12ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது மொத்தம் 30பாடல்களை கொண்ட நூல் ஆகும். இந்த திருப்பாவை நூலின் சிறப்பும், அதை அருளிய ஆண்டாளின் சிறப்புகளை பார்ப்போம்.  வைணவ பக்தி நூல்களின் தொகுப்பாக நாலாயிரம் திவ்ய பிரபந்தங்கள் என அழைக்கப்படுகின்றன. இதில் 473முதல் 503வரை உள்ள பாடல்களின் தொகுப்பு தான் திருப்பாவை பாடல்கள் ஆகும். 

திருப்பாவை பாடல்கள்: 

முதற்பாடல் 

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் 

நீராடப் போதுவீர் போதுமினோ

நேரிழையீர்  சீர்மல்கும் ஆய்ப்பாடிச்

செல்வச் சிறுமீர்காள் 

கூர்வேல் கொடுந்தொழிலன்

நந்தகோபன் குமரன் 

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் 

கார்மேனி செங்கண் கதிர்மதியம்

போல்முகத்தான் 

நாராயணனே நமக்கே பறை தருவான் 

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் 

​பரந்தாமனின் புகழைப் பாடும் பாடல் 

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி 

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றுநீ ராடினால் 

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்

மும்மாரி பெய்து 

ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக 

பூங்குவளைப் போதில் பொறிவண்டு

கண்படுப்பத் 

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி 

வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல்

பெரும்பசுக்கள் 

நீங்காத செல்வம் நிறைந்தேலோர்

எம்பாவாய் 

தாய்லாந்தில் திருப்பாவை: 

தமிழர்களின் பல்வேறு நல்ல விஷயங்களை பின்பற்றி வரும் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டு விழாவில் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுவது வழக்கமாக வைக்கப்பட்டுள்ளன.

பி.கிருஷாந்தினி

Comments