பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இத்தனை கோடியா? | தினகரன் வாரமஞ்சரி

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இத்தனை கோடியா?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் துவங்கி நடத்தி வருகிறார்கள். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனை பிரபல நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். 

இந்நிலையில் அவர் ஒயிட்ல் டாக் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இதையடுத்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு பிரேக் விட்டுவிட்டு ஒயில்ட் டாக் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். ஒயில் டாக் படப்பிடிப்பு தற்போது மணாலியில் நடந்து வருகிறது. 
நாகர்ஜுனா கிளம்பிச் சென்றதை அடுத்து அவரின் மருமகளும், நடிகையுமான சமந்தா கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை பார்த்தவர்களில் சிலர் சமந்தா நன்றாக செயல்பட்டதாக தெரிவித்தனர். மேலும் சிலரோ, நாகர்ஜுனா மாதிரி வராது, சமந்தாவை தொகுத்து வழங்க வைக்காமலேயே இருந்திருக்கலாம் என்று விமர்சித்தனர். 

நாகர்ஜுனா பட ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. 21 நாட்கள் ஷூட்டிங் என்பதால் மேலும் இரண்டு வாரங்களுக்கு சமந்தா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சமந்தாவுக்கு ரூ. 2.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். 

பிக் பாஸ் மேடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சமந்தா கூறியதாவது, 

பிக் பாஸ் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக நிற்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. என் மாமாவால் தான் எனக்கு இந்த பொறுப்பு கிடைத்துள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் அனுபவம் இல்லை, தெலுங்கு பயம் . இதற்கு முன்பு ஒரு எபிசோடு கூட பார்த்தது இல்லை என்கிற பயத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறேன். 

என் பயத்தில் இருந்து வெளியே வர உதவி செய்ததற்கும், என் மீது நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி மாமா. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிறகு கிடைத்த அன்பிற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.    

Comments