கானல் நதி – மீது
உலாப்போகும் ஓடங்கள்
கண்ணீரை யாசிக்கும்
விழியோரங்கள்
புரியாத பாஷைகள்
அழகான
மௌனங்கள்...
கனவுகள் கடந்த பருவம் – ஆனால்
விடை தேடும்
வினாக்கள்!
இதயம் கனக்கும்
விடைகள்!
மௌனம் காக்கும்
பெண்கள்!
மர்மமான வாழ்வு
மரணம்வரை
தொடரும்...
கதைபேசிய
நெடிய இலுப்பை மரத்தடி...
நீ – தந்த விநாயகர் பிரசாதம்
இனிக்கும் இளமை
யௌவன பருவ
துடிப்புக்கள்!
கனவாகிப் போன
நனவுகள் – உன்
விழித்தடம் – வழிமாறிய
மாயங்கள்?
பழிசுமக்கும்
சந்தேகக் கோடுகள்
அலையும் வாழ்வில்
இறுதியில்
உயிர்துடிப்பு...
அணையும் தீபத்தின்
நெடும் பயணம்...