ஸ்ரீதேவிக்கு அஞ்சலி! | தினகரன் வாரமஞ்சரி

ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!

'துணைவன்' முருகனாய்  
திரை வானில் நுழைந்து,  
‘நம்நாடு’ போற்றிய  
மக்கள் திலகத்துடனும்,  
நடிகர் திலகத்துடனும்...  
நடித்த தாரகை யே..,  
‘பதினாறு வயதினிலே'  
பார் போற்றும்,  
நடிப்பில் ‘மயிலா’ய்  
அழகு காட்டி... னாய்  
‘மீண்டும் கோகிலா' வாய்  
வந்தெம்மை கவர்ந்து...  
‘சிவப்பு ரோஜாக்கள்’  
சூடிக் கொண்டாய்!  
‘மூன்றாம் பிறை’ யிலே  
முழு நிலவாய்  
ஜொலித்தவள் நீ!  
‘வறுமையின் நிறம் சிவப்பில்'  
‘வளமை’ மிகு நடிப்பில்  
அசத்திய ‘ப்ரியா’வே  
‘நான் அடிமையில்லை’  
தமிழ் திரைக்கு...  
என்று தாவினாய்  
ஹிந்திக்கு!  
அங்கு மட்டுமா,  
இந்திய ‘மொழி’கள்  
பலவற்றிலும்  
இளவரசியாய்  
வலம் வந்தாய்!  
‘பைலட் பிரேமநாத்’தின்   
துணையோடு  
பறந்து வந்தாய்  
இலங்கைக்கும்!  
‘திரைப் பூங்கா’வின்  
பட்டாம் பூச்சியே...  
‘குரு’ விலும் கலக்கிய  
உன்னை...  
'பறந்தாலும் விட மாட்டோம்’  
என்றே இரசிகர்கள்  
சூழ்ந்தார்கள்!  
எத்தனையோ வேடங்களில்  
கலக்கிய....  
‘கனவுக் கன்னி’யே...  
உன்னை....  
இயமன் கவர்ந்து  
‘வாழ்வே மாயம்’ என  
உணர்த்தி விட்டாலும்,  
உன் ‘கலை’ முகம்  
கலையாது என்றும்  
இரசிகனின் ‘மனத்திரை’யில்!  

Comments