காதல் வேண்டும்...! | தினகரன் வாரமஞ்சரி

காதல் வேண்டும்...!

நிந்தவூர் கலாமா இப்றாகீம்

ஆதமேவாள் ‘எழுதிய கவிதை’ காதல்!  
அன்னைதமிழ் ‘இலக்கியத் தோகை’ காதல்!  
இளமைத் தேசத்தின் ‘இன்பப் பொய்கை’ காதல்!  
ஈடுயினையில்லா ‘அன்புமாயை’ காதல்!  
காதலென்பது சுகமானது! சுவையானது!  
காதலென்றும் மனிதமானது! புனிதமானது!  
அதனால்தான் காதலென்றும் காவியமானது!  
அகிலம் போற்றும் அற்புதமானது! அதிசயமானது!  
மனிதனென்று பிறந்துவிட்டால் காதல் வேண்டும்!  
மனிதமங்கே பூத்துவிட்டால் மாண்புதோன்றும்!  
புனிமான காதலென்றும் புகழாரம் சூடும்!  

 

பூக்களைப் போல நாளுமிங்கே புன்னகைத்துவாழும்!  

Comments