அடைபட்ட சிறையில் கூட
அடுத்தவர்களை
அடக்கி ஆள எண்ணிக்கொண்டிருக்கும்
நானுமொரு
சுதந்திரப் போராளி...
சுற்றியுள்ளவர்களின்
சுதந்திரத்தை பறித்துக்கொண்டிருக்கும்
நானுமொரு
விடுதலைப் போராளி...
'நான்' 'எனது' என்ற
குணவியாதி பெருகிப் படர்ந்து
சிறைக்குள்ளேயே சீரழியப் போவதாய்
அச்சுறுத்துகிறது
அரசியல் கைதிகளின் காலம்...!
விவேகானந்தனூர் சதீஸ், கிளிநொச்சி