சண்டை பிடித்துக் கொண்ட
இரவொன்றில் இருந்து
தொடங்கியது
என்னை போர்த்திக் கொண்ட
நிறை மாத மௌனம்!
நீருள் அமிழும் இரும்பாய்
உன்னோடு பேசிக் கொண்டிருந்த
வார்த்தைகள்,
புதைந்து கொண்டிருக்க – என்
மனக்கடல் எங்கும்!
என் வானத்தை நிறைக்கும்
நட்சத்திரம் – நீ
முகில் திரளாய் ஒட்டியிருக்கிறது
என் வாழ்க்கை!
எதார்த்த சந்திப்பில் நிகழ்ந்த
உரையாடல் போல்
அன்பை பரிமாறி விட்டு
சென்று விட்டாய்!
இப்போதுவரை
கரை முட்டும்
அலை நான்
எங்கும் விரிந்து கிடக்கு
உன்னை பற்றிய
எனது ஏக்கம்!
நி. லவன்