அமைதி வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

அமைதி வேண்டும்

மானிடர் தம் மனதில்
மாசுகள் நிதம் நீங்கி
கனிவுடன் கூடி உலகில்
கருணை கொள்ளல் வேண்டும்
உண்மையின் உயிர் சிறப்பை
உலகிற்கே எடுத்துணர்த்தி
அன்பு வழியி லென்றும்
அகிலமே சிறக்க வேண்டும்
சாதிகள் இரண்டெனும்
சமத்துவ மோங்கி தினம்
சதிநாச செயல்களெல்லாம்
சமாதியாய் போக வேண்டும்
உதிரத்தில் ஒன் றெனும்
உயரெண்ணம் கொண்டிங்கு
நித்தம் நெஞ்சத் துணிவுடன்
நிம்மதியாய் வாழ வேண்டும்
குற்றம் கொடுமை நீங்கி
குணமே குன்றென ஓங்கி
அற்ப உலகி லென்றும்
அமைதியே உதித்திட வேண்டும்

வரக்காமுறையூர் ராசிக்

Comments