கொழும்பு பல்கலை இதழியல் கற்கை நெறி பொறுப்பாளர் காலமானார் | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு பல்கலை இதழியல் கற்கை நெறி பொறுப்பாளர் காலமானார்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும், கொழும்பு பல்கலைக்கழக இதழியல் டிப்ளோமா கற்கைநெறியின் தமிழ் பிரிவு பொறுப்பாளருமான இரட்ணம் ஸ்ரீகாந்தன் நேற்று (14) காலமானார். இவரின் பூதவுடல் கல்கிஸை மஹிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின் ஈமக்கிரியைகள் நாளை (16) திங்கட்கிழமை மாலை 2.00 மணிக்கு கல்கிசை சேமக்காலையில் நடைபெறும். இவர் யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கொழும்பை வாழ்விடமாகவும் கொண்டவர். இறக்கும் போது 67 வயதாகும்.

இவர் கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடத்தின் புவியியல் துறையில் 30 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றியுள்ளதுடன், இதழியல் டிப்ளோமா கற்கைநெறி இணைப்பாளராக 15 வருடங்கள் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments