'லய சமர்ப்பணம்’ மிருதங்க அரங்கேற்றம் | தினகரன் வாரமஞ்சரி

'லய சமர்ப்பணம்’ மிருதங்க அரங்கேற்றம்

 'மிருதங்க வித்துவான்’, ‘சங்கீத ரத்தினம்’, ‘வாழ்நாள் சாதனையாளர்’ ஸ்ரீ அம்பலவாணர் ரகுநாதனின் மாணவனும் வைத்திய கலாநிதி நிரோஷ் சுப்பிரமணியம் மற்றும் திருமதி நளினி நிரோஷ் ஆகியோரின் புதல்வனுமான செல்வன் ஜொஹான் பிரவீன் சுப்ரமணியனின் மிருதங்க அரகேற்றம் ‘லய சமர்ப்பணம்’ எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6,30 க்கு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுற்கு கல்கிசை பரி தோமாவின் கல்லூரி அதிபர் அருட் திரு மார்க் பிலிமோரியா பிரதம விருந்தினராக கலந்துக் கொள்ளவுள்ளதுடன் பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் சி,பிரசாந்தன், கல்கிசை பரி தோமாவின் கல்லூரி பிரதி அதிபர் அசங்க எஸ், பெரேரா ஆகியோர் கெளரவ விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நிகழ்வுக்கான சிறப்பு விருந்தினர்களாக கொழும்பு, மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நீதியரசர் பா.சசிமகேந்திரன், அம்பாறை கிழக்கு மாகாண குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி நீதி அரசர் தி.யோ.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Comments