இலங்கை தொடர்பில் கனடா தொடர்ந்தும் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை தொடர்பில் கனடா தொடர்ந்தும்

ஹரி ஆனந்தசங்கரி

கிளிநொச்சி குறூப் நிருபர்

 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திலும், சர்வதேசத்திலும் நம்பிக்கையிழந்தே காணப்படுகின்றனர். எனவே கனடா, இலங்கை தொடர்பில் தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 321 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மேற்கொண்டு வரும் போராட்ட இடத்திற்குச் சென்ற அவர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த ஹரி ஆனந்தசங்கரி,
காணாமல் ஆக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக தான் இங்கு வந்ததாகவும், கடந்த தடவை வந்தபோது இருந்த அதேநிலைமை இன்றும் தொடர்கிறது. எவ்வித முன்னேற்றமும் இல்லை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகின்றேன்.மேலும் இலங்கை பிரச்சினை தொடர்பில் கனடா இறுக்கமான நிலைப்பாட்டை தொடர்ந்தும் கடைபிடிக்கும் எனவும் தெரிவித்தார்

Comments