சிரியா படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம் | தினகரன் வாரமஞ்சரி

சிரியா படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

ஹற்றன் சுழற்சி நிருபர்

 

சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையகத்தில் லிந்துலை பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டமொன்று லிந்துலை நாகசேனை நகரப்பகுதியில் இளைஞர், யுவதிகளினால் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த சில வாரங்களாக சிரியா நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பெண்கள், அதிகப்படியாக படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், பச்சிளம் குழந்தைகளை கொல்வதை ஐ.நா பார்த்துக் கொண்டிருப்பதை கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

2009 இல் இதே போன்ற அழிவை ஈழத் தமிழினமும் சந்தித்திருந்தது. அந்த வகையில் மலையகத்தில் வாழ்கின்ற மக்கள் சார்பில் சிரிய மக்களுக்காக போராடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகள் தெரிவித்தனர்.

அத்தோடு யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Comments