எம்.ஏ.எம்.நிலாம்
நீதிமன்றம் விதித்திருக்கும் இடைக்கால தடை உத்தரவு காரணமாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் எம். எம். முஹம்மத் தெரிவித்தார்.
நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக முக்கியமான செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி தேர்தல்கள் செயலகத்தில் இயங்க முடியாது.
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் பின்னரே அது தொடர்பில் எதனையும் செய்ய முடியும். உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையை மேலும் நீடித்திருப்பதால் தேர்தல் செயலகப் பணிகள் உள்ளக மட்டத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எது எவ்வாறாக இருந்த போதும் தேர்தல்கள் ஆணைக்குழு எமக்கு வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு அமையவே எம்மால் செயற்பட முடியும்.