புரிந்துணர்வுடனான சமூகத்தின் எதிர்பார்ப்புடன் உயிர்த்த ஞாயிறு உதயம் | தினகரன் வாரமஞ்சரி

புரிந்துணர்வுடனான சமூகத்தின் எதிர்பார்ப்புடன் உயிர்த்த ஞாயிறு உதயம்

கிறிஸ்தவ அடியார்கள் இயேசுபிரானின் மரணத்தையும் உயிர்த்தெழுதல் எனும் மரணத்திலிருந்து மீளெழுதலையும் நினைந்துகூர்ந்து அனுஷ்டிக்கும் உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இயேசுபிரான் மரணத்தை வெற்றிகொண்டு உயிர்த்தெழுந்ததை உயிர்த்த ஞாயிறு தினமாக மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் அனுஷ்டிக்கும் அதேவேளை, இத்தினத்திற்கு முன்னரான 40நாட்களைத் தவக்காலமாக கழிக்கும் கிறிஸ்தவ பக்தர்கள், இதன்போது உபவாசமிருந்து சுய தியாகத்தின் மூலம் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு மத கோட்பாடுகளைப் பின்பற்றுகின்றனர்.  

இயேசுபிரான் மானிட இனத்தின் மேம்பாட்டிற்காக அனுபவித்த வேதனைகளையும் மேற்கொண்ட உயிர்த் தியாகத்தையும் நினைவுகூரும் கிறிஸ்தவர்கள், மானிட சமூகத்திற்கு எதிராக எழும் வன்முறைகள், அழுத்தங்கள் ஆகியவற்றை எதிர்க்க கற்றுக் கொள்வதோடு, பரஸ்பரம் ஒன்றுக்கொன்று எதிராக ஏந்தப்படும் ஆயுதங்களின் குரூரத்தன்மையையும் கொடூரத்தையும் இனங்கண்டு கொள்கின்றனர்.  

சகலவித இம்சைகளும் தொந்தரவுகளும் அற்ற அமைதியான ஓர் இடமாக உலகம் அமைகின்றபோதே அது மனிதர்களின் அமைதியான தங்குமிடமாகின்றது.

அதிகாரத்திற்காகவோ, பணத்திற்காகவோ விதைக்கப்படும் இம்சை மனித வாழ்விற்கான சூழலை உருவாக்குவதில்லை என்பது தெட்டத் தெளிவாகின்றது.

இப்பின்னணியில் அன்பு, அமைதி, அந்நியோன்ய புரிந்துணர்வுடன் எழுந்து நிற்கும் மானிட சமூகத்தைப் பற்றிய எதிர்பார்ப்புடனேயே உயிர்த்த ஞாயிறு உதயமாகின்றது. 

அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்கும் அர்த்தபுஷ்டியான, அமைதியான உயிர்த்த ஞாயிறு தின நல்வாழ்த்துக்கள்என்றும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Comments