'தமிழர் ஐக்கிய முன்னணி': மட்டக்களப்பில் 5தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி | தினகரன் வாரமஞ்சரி

'தமிழர் ஐக்கிய முன்னணி': மட்டக்களப்பில் 5தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் முயற்சியால் ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி எனும் பெயரில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றிய தலைமைக் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தனர்.

இதில் ரி.சிவநாதன் தலைமையிலான கிழக்கு தமிழர் ஒன்றியம், வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, எஸ்.வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு சோ. கணேசமூர்த்தி தலைமையிலான இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி மற்றும் (கருணா அம்மான்) விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஆகிய ஐந்து கட்சிகளும் இணைந்து உதயசூரியன் சின்னத்துடன் தமிழர் ஐக்கிய முன்னணி எனும் பெயருடன் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடவேண்டும் எனும் இரண்டு வருட தீவிர முயற்சி இன்று கைகூடியிருக்கின்றது என ரி.சிவநாதன் தெரிவித்தார். 

பெரியபோரதீவு தினகரன் நிருபர்

Comments