மனிதாபிமான அடிப்படையில் தமிழ் கைதிகளை விடுவியுங்கள் | தினகரன் வாரமஞ்சரி

மனிதாபிமான அடிப்படையில் தமிழ் கைதிகளை விடுவியுங்கள்

நாட்டின் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்துமதத் தலைவர்களின் ஒருவரான பிரம்ம- சந்திரா ஐயர் ரகுபதி சர்மா உள்ளிட்ட தமிழ்க் கைதிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஜனாதிபதியைக் கடிதமூலம் கோரியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் மூவர்கொண்ட நீதியரசர்கள் குழுவால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஓர் இராணுவ அதிகாரியான சுனில் ரட்னாயக்கவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராசா, அதேபோன்று இந்த நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தமிழ்க் கைதிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளார். (வி)

நமது நிருபர்

Comments